புன்னகை புரிகிறார்கள்

சாதாரண மனிதர்களுக்கு
சாப்பிட வசதியிருந்தால்
நகை, நட்டுக்கு ஆசைபடாமல்
நலமோடு வாழ
கிடைக்கும் வசதிகளை
இன்பமாய் அனுபவிக்க
நினைப்பார்கள்—அதுபோல
நடுத்தர வயதுடைய
ஒரு தம்பதியினர்

இளமை என்றும்
நிரந்தரமில்லையென
நினைத்து இருவரும் ஒன்றாக
முதுமையை வெல்ல
முயற்சி எடுத்தார்கள்,
நாள் தோறும் தவறாமல்
நடை பயணம் செய்து
நிம்மதி கொண்டார்கள்

முடிவில் பெரியவர்
தோற்று போனார்,
வெற்றி மனைவிக்கு
என்றும் இளமையோடு
பூமாலையுடன்
புன்னகை புரிகிறார்கள்
சுவற்றில் மாட்டிய
புகை படத்தில்.

எழுதியவர் : கோ. கணபதி. (23-Feb-20, 8:45 am)
சேர்த்தது : கோ.கணபதி
பார்வை : 82

மேலே