விண்வெளி வீரனுக்கு நினைவஞ்சலி

உலகமே கண்ணீர் வடிக்கும்
உத்தமர் டாக்டர் அப்துல்கலாம்
உயிர்நீத்த பின்பும்
கோடானு கோடி மக்களுக்கு
பாடம் புகட்டி சென்றிருக்கிறார்

இறுதிச்சடங்குகள்
குண்டூசி சத்தமின்றி
எத்திசையும் யுத்தமின்றி
எள்ளளவும் ரத்தமின்றி
எங்கெங்கும் நொடிக்கு நொடி புகழாரம் மட்டும்...

இவ்விடம்
ஒரு அரசியல் பெரும்புள்ளி
சாதிக்கட்சி புரட்சியாளன்
மதக்கட்சி ஆட்சியாளன்
எவனொருவன்
வீழ்ந்து கிடப்பின்
என்னவெல்லாம் நடந்திருக்கும்?

ஆளுங்கட்சி எதிர்கட்சி கோஷ்டி மோதலால்
ஆங்காங்கே வீடுகள் தீப்பற்றி எரிந்திருக்கும்

சாதிக்காரன் மாற்று சாதிக்காரனை
வெட்டிக்கொண்டு சுத்தபூமி ரத்தம் தெறித்திருக்கும்

மதவெறி முற்றி போய்
மனித வெடிகுண்டுகளாய்
மாறிய ஒருவனால்
பல அப்பாவி குடும்பங்கள்
அழிக்கப்பட்டிருக்கும்

ஆசிரியராய் பணியாற்றி
ஆராய்ச்சியாளராய் வெற்றிக்கொடி நாட்டி
நாட்டின் நல்ல குடிமகனாய்
முடிசூட்டி
கடைசிவரை
இளைஞர்களுக்கு வழிகாட்டியென
திகழ்ந்த மாமேதை
எங்கள் ஆசான் கலாம்
கனவு மெய்ப்பட
தூக்கியெறியுங்கள் சாதிவெறி
தூக்கியெறியுங்கள் மதவெறி
தூக்கியெறியுங்கள் கோஷ்டி மோதல்

பின்

கனவு கானுங்கள்
திட்டமிடுங்கள்
செயல்படுங்கள்

வலிமையான பாரதம்
ஒளிமயமான எதிர்காலம்
நிச்சயம்

-மன்னை சுரேஷ்

எழுதியவர் : மன்னை சுரேஷ் (23-Feb-20, 4:09 pm)
பார்வை : 38

மேலே