மார்பகப் புற்றுநோய் விழிப்புணர்வு

மார்பகப் புற்று நோய்.... ஒரு விழிப்புணர்ச்சி

கண்ணே மணியே நான் சொல்வதைக் கேளு....
கருத்துடன் அதை நீயும் மற்றவர்க்கும் கூறு.....

அதீத உயிரணு பெருக்கம்தான் புற்றுநோய்
உதிர உறவுகள் மரபணுவால் வந்திடும் பற்றுநோய்

மார்பகப் புற்றுநோய் பெண்களுக்கு ஆபத்து
ஆரம்பத்தில் கண்டறிந்தால் தவிர்த்திடலாம் உயிரிழப்பு.....

மாதம் ஒருமுறை சுயபரிசோதனை அவசியம்
வடிவிலும் அளவிலும் வண்ணத்திலும்
மாற்றம்வரின்
சிறு கட்டிகள் சீல் திரவம் முலையில் கசியின்
மோனோகிராம் சோதனை மிகமிக அவசியம்

கட்டிகள் இருப்பின் பையாப்சி செய்திடணும்
புற்று என்று உறுதியானால்
முறையாய் சிகிச்சை பெற்றிடவேணும்

அறுவைசிகிச்சையில் அகற்றுதல் முதல்நிலை
புற்றின் முதிர்நிலை வைத்தே
அடுத்தக்கட்ட சிகிச்சை முறை

தவறாமல் மதலைக்கு தாய்ப்பால் ஊட்டுதல்
சத்தாண காய்பழங்கள் உணவோடு உட்கொளல்
முறையான உடற்பயிற்சி விடாது மேற்கொளல்
தவிர்த்திடும் மார்கப் புற்றுநோய் வராமல்...

எழுதியவர் : வை.அமுதா (24-Feb-20, 9:02 pm)
பார்வை : 51

மேலே