Oru varthai

காதலியே என் அன்பே
என் உயிரில் ஒன்றாய் கலந்தவளே
ஒவ்வொரு நொடியும் உன் நினைவுகளுடன் உயிர் வாழ்கிறேனடி
ஓர் நாள் உன்னை பார்க்காவிடில் உன் குரலை கேட்காவிடில் பைத்தியமாகிறேன்னடி
என்னையே நான் மறந்து நித்தமும் உன் நினைப்பில் மூழ்கி தவிக்கிறேன்னடி
நான் தவிப்பது அறிந்தும் மௌனமாய் நீ இருப்பது எதனாலோ
நான் தவறு எதுவும் செய்திருந்தால் ஆயுதத்தினால் என்னை அடித்து விடு பெண்ணே
அதை விட்டு மௌனமாய் இருக்காதே
மரணத்தை காட்டிலும் உன் மௌனம் ஒவ்வொரு நிமிடமும் என்னை கொல்கிறதடி
மறைக்காமல் நீ தான் என் மனவாளன் என்று மனம் திறந்து கூறிவிடு
நீ கூறும் இந்த ஒற்றை வார்த்தையால் நான் உயிர் வாழ்கிறேன் ‌
இல்லையெனில் என்றாவது நீ சொல்வாய் என்று என்றென்றும் நம்பிக்கையுடன் காத்திருப்பேன் என் காதலியே !!!!!

எழுதியவர் : M. Chermalatha (26-Feb-20, 3:41 am)
சேர்த்தது : M Chermalatha
பார்வை : 131

மேலே