அவள்♥️

அவள்♥️

கற்பனைக்கு எட்டா அழகோவியம்
வானத்தில் இருந்து விழுந்த அதிசயம்
கவிதத்துவமான அற்புத வடிவம்
வழி தவறி வந்து வானத்து தேவதை

கம்பனின் சீதை
இளங்கோவனின் மாதவி
காளிதாசனின் சாகுந்தலை
பாரதியின் கண்ணம்மா

நின்றால் உயிருள்ள அழகு சிலை
நடந்தால் நாட்டியம்
பார்வை ஆயிரம் அம்பு
பேசினால் தேன் சொட்டும் கவிதை
சிரித்தால்
மெய் சிலிர்க்கும் சங்கிதம்.
ஒயில் இடை
உருவமற்ற இறைவன்.

- பாலு.

எழுதியவர் : பாலு (26-Feb-20, 2:36 pm)
பார்வை : 93

மேலே