உயிரில் கலந்த உறவே
கடந்து வந்த இருட்டறை தொடங்கியதோ
கருவறையில் தான் - புது வாழ்விற்காக
அது முடிந்ததோ கல்லறையில் தான் - உன்
நினைவுகளில் மடிவதற்காக
மயக்க நிலையை தந்த உன் காதல்
பிறகு ஏன் அதன் பிரிவில்
தூக்க நிலையை தருகிறது
ஒருமுறை உன்னை சுமக்க
கருவறையை நாடும் ஒரு கல்லறை .......