என்னடி மாயாவி நீ

உறவின் உணர்வினை புரிந்து
செயலின் தவறினை அறிந்து
கடினமான வார்த்தைகளை துறந்து
வலியின் ஒளியை உணர்ந்து
அங்கும் இங்கும் விரைந்து உன்னை
மறக்க நினைத்தேன் - நினைவினில் வந்தாய்
வெறுக்க நினைத்தேன் - உயிரினில் நின்றாய்
நேசிக்க நினைத்தேன் - விலகி சென்றாய்
என்னுள் நிறைந்த நிலவே நீங்காதே !
அனைத்தும் மாயே என அறிந்தும்
உன் நினைவுகளை போதையாக கொண்ட ஒரு மனம் .

எழுதியவர் : நிழலின் ஓவியம் (27-Feb-20, 9:20 am)
சேர்த்தது : கண்ணம்மா
Tanglish : ennadi maayaavi nee
பார்வை : 80

மேலே