காதல்

அவர்கள் காதலை ஆமோதிக்கா தந்தை
மகளைக் கேட்டார், 'மகளே கடைசியாக
கேட்கிறேன் சொல். ' காதலா, பாசமா
என்று ...... அதற்கவள் கொஞ்சமும் தயங்காது
சொன்னாள்.....'அப்பா காதல்தான் ' என்றாள்.
இருவருக்கும் அதுவே கடைசி உறுதி மொழி
தந்தையின் பாசத்திற்கு அவள் வைத்த
முற்றுப்புள்ளி, ....... அவள் அறியாள் அதுவே
தந்தை மகளின் காதலுக்கு வைத்த முற்றுப்புள்ளியும்
அதுவே என்று.

எழுதியவர் : வாசவன் -தமிழ்பித்தன் -வாசு (28-Feb-20, 9:48 pm)
Tanglish : kaadhal
பார்வை : 201

மேலே