பெண்ணே

நாற்றுக்கு நீராதாரம் பெண்ணே
மனிதர்க்கு நீ ஆதாரம்
ஆதிமுதல் அந்தம்வரை பெண்ணே
அனைத்திற்கும் அடிநாதமாய்..
ஊணுறக்கம் மறந்துனையே பெண்ணே
மனிதகுலம் வளர்த்தெடுத்தாய்
மடமையெனும் பழி தவிர்த்தே இனி
மனங்குளிர நடையிடுவாய்
கருப்பை சுமந்த நெருப்பே நீ
கனிவின் ஊற்றெடுப்பே..
அன்பும் அறமும் கண்டெடுக்கும்
பெண்ணே நீ
புதையலடி..

எழுதியவர் : Rafiq (8-Mar-20, 11:44 am)
சேர்த்தது : Rafiq
பார்வை : 178

மேலே