இசையில் தொலைந்த நாட்கள்

🌹🌹🌹🎶🎵🎶🎼🎶🎵🎶🌹🌹🌹

உன் மனதும் , என் மனதும்
இணைய நினைத்த கணங்கள்
யாவும் ; பல்லவியும் , சரணமும்
இழைத்து உருவாக்கிய பாடலின்
பிரேமை நிலையில் உள்ளத்தில் நிறைந்திருக்கும் !..

உன் நினைவுகளின் சஞ்சாரங்களோ
இயற்கையோடு உருவாகும் மூங்கில்
காட்டில் ஊற்றெடுத்து காற்றில் மிதந்து வரும் ஓசையின் இசையாக நொடியும் விலகாது .
மனம் முழுவதும் நறுமணம் கமழ .

கடலின் ஆர்ப்பரிக்கும் அலையின்
சத்தத்துடன் போட்டியிடும் உன்
நினைவுகளின் நாதமுமே.....

இசைக்கருவிகள் தோற்றுவிக்கும் இசையுமே தோற்று போகட்டும் ...
உயிர் துடிக்கும் ஓசையும் இசையானதில் .

பூத்திருக்கும் உயிரின் இசையின்
ஒலியினை கண்டு காற்றினில்
கலந்து மறைந்தும் போகட்டுமே இசையும் !..,

வாழ்வின் தருணங்கள் இசையோடும்
உன் நினைவுகளோடும் தோலைந்து
போகட்டுமே என்றும் உன் நினைவுடனே.
இசையினையும் வெல்வோமா... இதயத்தின் துடிப்பினிலே என்றென்றும் !.....

🌹🙏🌹

எழுதியவர் : (12-Mar-20, 11:41 am)
சேர்த்தது : Piyu
பார்வை : 58

மேலே