கொரோனா கவசம்

பாடுபடுத்திய படியே எம்மை
பயமுறுத்தி வீட்டில் முடக்கி போட்டு
பல விருந்து நிகழ்வுகளை பலவந்தப்படுத்தி
பன்னெடுங்கோடி கனவுகளை பாழ்படுத்தி
பம்மாத்து காட்டும் கொரோனாவே

நீலக்கல் பொன் மோதிரங்களும்
நெற்மூட்டை பல கோடியும்
நெடுஞ்சுவை செழித்தப் பழங்களும்
குளுமைத் தரும் அரசமர நிழலும்
குவித்து உமக்கு கொடுக்கிறோம்

உலகை விட்டு ஓடிவிடு
உயிரோடு எங்களை வாழவிடு
உன்னத வாழ்வில் உள்ள சுவையை
உணர்ந்து மகிழ்ந்து வாழ்ந்திடவே
உறுதுணையாய் இருக்க நீ அழிந்துவிடு.
----- நன்னாடன்.

எழுதியவர் : நன்னாடன் (23-Mar-20, 5:58 pm)
பார்வை : 77

மேலே