இனிமேலாவது

மகத்தான மதத்தை பின்பற்றுவதாய்
மதங்கொண்டு அலையும் மதவாதிகளே
மனித குலம் மாட்டிக் கொண்டு விழிக்கின்றது
மாற்ற இயலாத மாபெரும் கேடால் - உங்கள்
மதக் கோட்பாடுகளோ மத இறைவர்களோ
மாற்றியமைத்து நோய்க்கு மருந்திடுவார்களோ
எண்ணிக்கையில்லா தவறுகள் செய்யவும்
எத்தனையோ உயிர்களை சிதைத்து உண்ணவும்
எவரையும் மனிதத்தன்மை இழக்க வைக்கவும்
எத்தகைய கீழ்ச்செயலையும் தூண்டும் எண்ணங்களை
மனித அரக்க பேய்களே மாற்றிக் கொள்ளங்கள்
மாண்பான பிறவி மனிதப்பிறவி அதை
மாட்சிமையுடையதாய் மாற்றி வாழ்ந்து முடிப்போம்.
------ நன்னாடன்.

எழுதியவர் : நன்னாடன் (24-Mar-20, 1:20 pm)
சேர்த்தது : நன்னாடன்
Tanglish : inimelaavathu
பார்வை : 58

மேலே