நிலவு-வானம்-முகில்
வானைத்தேடி போய்க்கொண்டிருந்தது நிலவு
வழியை மறைத்தது வெண்முகில் நிலவைக்
கேட்டது, 'நீ போவதெங்கே நான் இங்கிருக்க
சொல் நிலவே' என்று ...... நிலவு சொன்னது
இத்தனை நாள் 'வானிலை' மிதக்கும் நான்
வான் யார் எது என்று கண்டேனில்லேன் அதனால்
வழிமறைத்த முகிலும் போய்வா நிலவே என்றது