கரை கடக்கும் கொரோனா

கரை கடக்கும் கொரோனா..
------------------------------------
கொரோனா நயந்து
-- கொழுத்து வந்தே
பொய்யான வாழ்வின்
--- மேனியை சூறையாடியே
ஏன்தான் கொல்கிறாய்
---எதுவும் சொல்லிவிடன்
கையிருப்பில் இருக்கும்
----காலமும் அறைக்கதவில்
அடைக்கப்பட்டு மௌனிக்க
----அனலாக வியர்த்தே
இன்பங்களை மாற்றிவிடவே
----குந்தகங்கள் நாடிவருகிறதே
கொரோனா வந்தாலே
---மகிழ்வு இல்லையே
கொரோனவை தவிர்த்தாலே
----இன்பம் பெருகுமே
சிந்தனையில் வைத்தே
---ஒன்றுபட்ட உணர்வோடு
ஒவ்வொரு நொடியையும்
----விடுதலை செய்யவே
கரை கடக்கும் கொரோனா..
கவிச்சுடர் அகிலன் ராஜா
கனடா (காலையடி யாழ்ப்பாணம் )

எழுதியவர் : கவிச்சுடர் அகிலன் ராஜா (28-Mar-20, 12:37 am)
பார்வை : 53

மேலே