காதல் வலி 81
அவளின் பாதம்
பாதம் அல்ல பாதாம்
அவளின் குரல் குரல் அல்ல
அது திருக்குறள்
விரல்கள் ஒவ்வொன்றும்
விரல்கள் அல்ல
அவை மாணிக்கப் பரல்கள்
கைகள் அல்ல அவை
சஞ்சீவி மூலிகைகள்
அவள் தலையில்
சூடும் பூ
இனிப்பு ஆகிறது
அவளின் கூந்தல்
கூந்தல் அல்ல
இருளில் கிடக்கும்
இளைஞர்களுக்கு
அது ராந்தல்
அவளைப் பார்க்கும்
அனைவரும் பலி ஆகின்றனர்
அவள் பார்க்கும்
ஒருவன் மட்டும்
பாகுபலி ஆகின்றான்
அவள்
பதினோராவது அவதாரம்
இறைவா எனக்கு எப்போது
ஆவாள் அவ தாரம்