உன்விரல் பட்டுமலர்ந்த அதிசயம் என்ன
தென்றல் தொட்டும் மலராத மொட்டுக்கள்
உன்விரல் பட்டுமலர்ந்த அதிசயம் என்ன ?
புன்னகை புரிகிறான் இறைவனும் ஆலயத்தில்
தன்னை அருச்சிக்க பூக்கள் கிடைக்குமென்று !
காலைத் தென்றலை இனிமையாக்கி என்மனதை
சோலை யாக்கினாய் மனம்பூக்கள் ஆனதே !