குயிலோசை கேட்ககையிலே ---------------------------------------

குயிலோசை கேட்க(கை)யிலே...
---------------------------------------
தேடிவரும் குயிலோசை
----தேகம்தனை வருடவே
தேடுற குணமும்
---பெருகியே செல்கிறதே
பூக்களின் தீவே
----புயலின் அசைவே
அழகான வலியை
---ஆறுதலாக தந்தே
இன்பத்தின் நினைவுகளை
----இனிதே விதைக்கிறியே
இனிய மணித்துளிகளையும்
----இருளின்றியே ஒளியாக்கியே
இழுத்தே நின்று
---இருளையும் ரசிக்கிறேனே

ஓசையின் உந்துசக்தி
---ஓயாமல் மயக்கவே
திக்கிலே தெளிந்தே
---- தித்திப்பாய் மலர்க்கின்றேனே
கவிச்சுடர் அகிலன் ராஜா

எழுதியவர் : கவிச்சுடர் அகிலன் ராஜா (29-Mar-20, 10:21 am)
பார்வை : 108

மேலே