சீர்பெறல் சிறப்பு

========================
நாளுக்கு நாள்பல நாடுக லெங்கிலும்
நீளுமா பத்து நெடுங்கதை – வாளுண்டு
என்றஞ்சா வீரனு மிங்கஞ்சி நின்றிட
வென்றுரு வானதோர் வாள்
**
வாள்கொண்டு சாய்த்திட வொண்ணா திமிரினை
தோள்தொட்டுச் சாய்த்திடுந் தொற்றிது – ஆள்பேதம்
பாரா தணைத்துப் பரவிநமை யொன்றாகச்
சேரா திருத்திடும் சீக்கு.
**
சீக்குப் பிடித்துநாம் சீக்கிரம் மாய்ந்திடும்
போக்கைத் தடுத்துப் புயமுயர்த்து – யாக்கை
திடமாக்க யாவையுந் தின்னா தடக்கிப்
புடம்போ டுனைநீ புரிந்து.
**
புரியா பிணியைப் புரிந்தொதுங்கி வாழ்வை
மரியாதை யாக்கு மனிதா – விரியா
சிறகோ டுனதருமை வீட்டுச் சிறுவர்
பறந்திட வானாகிப் பார்.
*
பார்ப்பதற் கொவ்வா பதவி வழங்கியே
சேர்க்கும் மயானத்தில் சேராதே – நீர்த்திட
ஓர்வழி செய்துலகில் ஒவ்வோர் உயிருமே
சீர்பெறச் செய்வாய் சிறப்பு.
***
**மெய்யன் நடராஜ்

எழுதியவர் : மெய்யன் நடராஜ் (30-Mar-20, 1:08 am)
சேர்த்தது : மெய்யன் நடராஜ்
பார்வை : 80

மேலே