வாழ்த்திப் பாடுவேன்

மண்ணில் வாழுந் தெய்வ மென்று
மருத்து வர்தாள் பணிகிறேன் !
கண்ணி ரண்டின் நீர்ப்பெ ருக்கில்
கைகள் கூப்பித் தொழுகிறேன் !
எண்ணற் றோரின் சேவை யெண்ணி
இதயம் நெகிழ்ந்து சிலிர்க்கிறேன் !
தொண்டு செய்யும் தூய நெஞ்சைத்
தொடர்ந்து வாழ்த்திப் பாடுவேன் !!

சியாமளா ராஜசேகர்

உலக மருத்துவர்கள், செவிலியர்கள், உதவியாளர்கள் அனைவருக்கும் சிரம் தாழ்ந்த வணக்கங்கள், நன்றிகள் 🙏🙏🙏🙏

எழுதியவர் : சியாமளா ராஜசேகர் (30-Mar-20, 1:32 am)
சேர்த்தது : Shyamala Rajasekar
Tanglish : vaazthip paaduven
பார்வை : 29

மேலே