பரவை முனியம்மா

பரவை யென்னும் சிற்றுறில்
நீ பிறந்தாலும்
பறவைபோல உலகெங்கும்
நாட்டுப்புற இசையில்
பறந்தாயே என் ஆத்தா முனியம்மா ...
உன் உயிர் மறித்தாலும்
உன் இசை என்
செவியில் குயிலிசையாய்
வந்து சேர்கிறது...
நீ மரணம் அடைந்துவிட்டாய் யென்று
உலகம் நினைக்கிறது
இல்லை ஆத்தா
உன் குரலிசை
இப்ப கொறனவையே
விரட்டும் அளவுக்கு
எங்கள் தனிமைக்கு
மருந்தாக இருக்கிறது ஆத்தா,
உன் ஆத்மா சாந்தியடைய
அந்த கருப்பனிடம் வேண்டிக்கொள்கிறேன்.

எழுதியவர் : இரா.அரிகிருஷ்ணன் (30-Mar-20, 6:28 pm)
சேர்த்தது : இராஅரிகிருஷ்ணன்
பார்வை : 76

மேலே