பசி
ஒவ்வொருமுறையும் பரிமாறும்போது
பசி குறையவில்லை கூடுகிறது
சாமானியனின் பசி
உணவாலும் உடலாலும் அடங்கிப்போகிறது
கவிஞனின் பசி ஒருபோதும் அடங்குவதேயில்லை
அழுக்கைத்தின்று தடாகத்தை சுத்தமாக்கும் மீனைப்போல்
கவிஞன் சமுதாய அழுக்கைத் தின்று
அதை சுத்தப்படுத்தும்போது
அவனின் பசி அடங்குவதேயில்லை
சமுதாயத்தில் அழுக்குகள் குறையவில்லை கூடுகிறது
என்று தணியுமோ இந்த கவிஞனின் பசி
ஒவ்வொருமுறையும் பரிமாறும்போது
பசி குறையவில்லை கூடுகிறது...