புதியதோர் மௌனகீதம் பாட வந்தாள்

புதியதோர் பூபாளம் புலர்காலை பாட
உதயகாலக் கிரணங்கள் செந்நிறமாய் விரிய
இதயத்தேனை மலர்கள் மகிழ்ந்து சொரிய
நதியலைக் கூந்தல் காற்றினில் மிதந்தாட
புதியதோர் மௌனகீதம் பாட வந்தாள் !

எழுதியவர் : கவின் சாரலன் (3-Apr-20, 10:17 am)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 43

மேலே