கோரோனா

கோரோனா என்ற விஷ கிருமி வெளியிருந்து வந்தது
கோலாகலங்களெல்லாம் அடைத்து  முடங்க வைத்தது
கூட்டு பறவையாக கதவடைத்து உள்ளடங்க வைத்தது
கூடும் மக்கள் யாரும் விலகி வாழ வேண்டி வந்தது
காதில் கேட்கும் செய்தி யாவும் திடுக்கிடும் படி வந்தது
கண்ணில் காணும் காட்சி யாவும் கலங்க வைத்தது
காலன் தனக்கு இட்ட  பணி  செய்ய வந்திட
கண்கலங்கி நிற்கும் மக்கள் துயர் அதிகரிக்க
ஒவ்வொரு நாளும் நகர்ந்து செல்வதற்கு மனதில்
உறுதியளித்து திண்மையுடன் உயிர் வாழ
இறையருளை வேண்டி இனி நாளும் பிராத்திப்போம் ! 

எழுதியவர் : கே என் ராம் (4-Apr-20, 1:04 am)
சேர்த்தது : கே என் ராம்
பார்வை : 91

மேலே