எல்லா நோய்க்கும் ஒரே மருந்து

எல்லா நோய்க்கும் ஒரே மருந்து.

பொடியா நோய்போகப் புகன்றிட்டா ரென்னந்தி
மடிவான சூதம் மகத்தான தங்கமும்
பிடிவான் கெந்தியின் பேரான சத்துங்
குடியாய்ச் செந்தூறித்துக் கூட்டியே நின்றிடே (திருமூலர்)

திருமூலரின் பாட்டன் நந்தி அவருக்கு சொன்னாராம் தங்கம் ,சூதம் என்கிற ரசத்துடன்
இன்னும் சத்ரு மித்ரு சரக்கு களால் ஜெயம் செய்து கந்தகத்துடன் அரைத்துப் புடம்
போட்டு செந்தூரமாக்கி தக்க அனுபானத்துடன் சாப்பிட எல்லா நோயும் தவிடு
பொடியாகும என்றாராம்.

அகத்தியரும் எட்டு உலோகத்தையும் உருக்கி சுத்தம் செய்து கூ ட்ட வேண்டிய
பாஷாண சத்து சேர்த்து கெந்தகத்துடன் அரைத்துப் புடம் போட்டு அதனுடன் கால் எனும்
சக்தி சுண்ணம் தலை எனும் சிவச் சுன்னம் சேர்த்து அரைத்து புடமிட்டு எந்த நோய்க்கும்
கொடுக்க ஓடிக் கட லில் விழுமாம். (அட்டலோக மாரண செந்தூரம்

தாளகம் என்பது நவபாஷாணங் களில் ஒன்று . இது கொடிய ஷயத்தையத்தை
நுரை ஈரல் வியாதி மூச்சிரைப்பு மூச்சடைப்பு இவற்றை உடனடியாகப் போக்கும்.
இப்போது பெயரளவில் சித்த டாக்டர் கள் இருக்கிறார்கள். சித்தர் வாகடங்களைப் பார்த்து
படித்து தாளகத்தை (1) சுத்தி செய்து, (2) புகையடங்க கட்டி சத்துருவால் விஷத்தைக் கொன்று
மித்ரு சரக்கால் தாளகத்தின் மருத்துவ குணத்தை ஊக்குவித்து அதனுடன் முப்பு எனும்
கால்=. சக்தி சுண்ணம் தலை = சிவசுண்ணம் (முப்பூ) சேர்த்து கடை சரக்குகளைச் சேர்த்து
அரைத்து புடமிட்டு மாத்திரைகள் செய்வார்களா ? இந்த மருந்தைக் கொடுத்தால்
மூச்சை யாராலும் எப்போதும் நிறுத்த முடியாது. இதை இப்போதிருக்கும் அரசு மருத்துவர்கள்
சவாலாக செய்து முடிப்பார் களா ?

எழுதியவர் : பழனிராஜன் (4-Apr-20, 11:04 am)
சேர்த்தது : Palani Rajan
பார்வை : 140

மேலே