உனக்குத்தானடி

நான் இயற்றியதெல்லாம் உனக்குத் தானடி -- இந்த,
கள்ளிச் செடியில் மல்லி பூத்ததும்
நீ சூடத்தானடி --அதில்
உன் நாமம் கிறுக்கி பால் வடிந்ததும்
நீ பருகத்தானடி. -இந்த
கல்லறைக் காட்டில் கவிதை மலர்ந்ததும் உன் கருவிழியால் தானடி..
என் ஐம்புலன்களும் ஆயுள் இழந்ததும்
உன் அழகில்தானடி.....
-ஜாக்.

எழுதியவர் : ஜாக் (4-Apr-20, 11:20 pm)
சேர்த்தது : ஜெ கணேஷ்
பார்வை : 172

மேலே