கன்னியெனும் காலக்கூறு

பண்ணிசைத் தீராதிசை பதுமையவள் மீட்டிடவே
எண்ணிமைப் பொழுதில் மீண்டேனும் கடவேனோ
மண்ணிமை மாறாது மலர்ந்திட்ட ஓர்வடிவாம்
கண்ணிமை யொன்றாய் கருத்து மொன்றிட
விண்ணிமைச் கூறா வியத்தகு நெறியே
பெண்ணியம் சேராப் பெருந்தகை யுண்டோ.

எழுதியவர் : கௌதமன் நீல்ராஜ் (5-Apr-20, 6:10 am)
சேர்த்தது : கௌதமன் நீல்ராஜ்
பார்வை : 32

மேலே