உன்னை நினைத்தேன்

நிழலாய் இருப்பாய் என்று நினைத்தேன் ....
இருளைத் தந்து விலகினாய்!!
மூச்சாய் இருப்பாய் என்று நினைத்தேன் ....
காற்றை எடுத்து சென்றாய் !!!
கருவிழியாய் இருப்பாய் என்று நினைத்தேன் ....
கண்ணீரைத் தந்து சென்றாய் !!!
இதயமாக மாறுவாய் என்று நினைத்தேன் .....
மனதை உடைத்து சென்றாய் !!!!!
உயிராய் இருப்பாய் என்று நினைத்தேன் ....
உயிரை உருக்கி சென்றாய் !!!!
நான் நினைத்தது பாவமா ?
நினைக்க வேண்டாமென்று கண்களை மூடினால்
கனவிலும் நீதானே என் கண்ணே !!!
கனவும் உன்னையே எண்ணி தவிக்கிறது !!!!

எழுதியவர் : குமார் (5-Apr-20, 12:26 pm)
Tanglish : unnai ninaithen
பார்வை : 420

மேலே