என்னைவிட்டு மறைந்தாள்

மனது எதற்காகவோ அலைகிறது
மாயம் நிறைந்த மனப்புழக்கம் விளைகிறது..
வியர்வைத்துளி இல்லாமல் வியர்க்கிறது.....
மூச்சு தீராமல் மூச்சிறைக்கிறது..
எங்கோ பார்த்த காட்சிகள் நினைவில் நிற்கிறது..
தயக்கமில்லாமல் சிறு மயக்கம் வருகிறது..
தெரிந்த வாசமொன்று தெளிவில்லாமல் வீசுகிறது...
யாரென்று காண தோணுகிறது..
பெண்மையில் நான் விழுவது புரிகிறது..
தூரத்து இருளில் அவள் எரிந்தாள்..
நான் துரத்துகையில் இருளைவிட்டு பிரிந்தாள்..
வான் நோக்கினேன்..
கறுப்பு வானவில்லாய் வளைந்தாள்..
நிறங்களைத் துறந்து விரிந்தாள்..
விண்மீன் கூடத்துக்குள் விரைந்தாள்
விண்ணை விட்டுப் பிரிந்தாள்..
காண முடியாத காரிகை அவள்..
கண்டும் காணாத காணல் நீர் அவள்..
நான் நினைத்தது போலவே இருந்தாள்...
இறுதில்,
நான் நினைத்ததைப் போலவே மறைந்தாள் ...
என்னை விட்டு மறைந்தாள்...
-ஜாக்.✍️

எழுதியவர் : ஜாக் (8-Apr-20, 4:07 pm)
சேர்த்தது : ஜெ கணேஷ்
பார்வை : 295

மேலே