யாரவன்

நீங்கா நினைவுகளின் கதாநாயகன்
கனவுலகின் இம்சை அரசன்
நிகழ்கால திருடனவன் !!

அன்பில் தாயுமானான்
அரவணைப்பில் தந்தையுமானான்
விட்டுக்கொடுப்பதில் சகோதரனவன்
வேடிக்கைக்காட்டும் நண்பன்
கற்று கொடுப்பதில் ஆசான்
தோல் கொடுக்க வந்த தோழன்
மன்னிப்பதில் தேவனுமானான்

கண்களால் கவிதை படைப்பான்
வற்றாத சிரிப்புக்கு சொந்தக்காரன்

இயற்கையையே வர்ணிக்க என்னிடமுள்ள உவமையவன் !!!
உவமேயமும் அவனே !!!!

பூக்களின் வர்ணங்கள்
வண்டுகளின் ரீங்காரம்
சிட்டுகளின் சுசுறுப்பு
தென்றலின் மணம்
மதியின் தன்மை
கடலின் ஆழம்
வானத்தின் நீலம்
.
.
.
.
இறுதியில் நெருப்பாகவும் சுடுகிறான் !!!

எழுதியவர் : கோப்பெருந்தேவி (8-Apr-20, 11:01 pm)
Tanglish : yaravan
பார்வை : 185

மேலே