மலராத நினைவுகள்

காணும் பொருள் யாவும்

உன் நினைவலை

ஞாபகங்கள்...

நாம் கை  கோர்த்து

நடந்த பாதை கால் தடம்

காட்டிடுமே

கடற்கரை மணல் கூட
 
நம் மேல்  ஆசி கூறி சென்றிடுமே

சிதறிய பூக்களின் மேல்

நாள்தோறும் அமர்ந்திருந்தோம்

இளங்காற்று வீசி வந்து நாம்

பேசுவதை கேட்டிடுமோ

மெல்லிய குரலில் இதழ் மலர்வாய்

நேரம் போவதை உணராமல்

நிலா வந்து விரட்டி விடும்

இருந்தும் பிரிய மனமின்றி

வீட்டிலும் அளவளாவுவோம்

அலைபேசி துணைக்கொண்டு ,

இப்படியெல்லாம் இருந்தோமே

எங்கிருக்கிறாய் தெரியவில்லை

உன் நினைவுகள் வரும் போது

சில நேரம் நீர்த்துளிகள்

விழியோரம்...

எழுதியவர் : த பசுபதி (9-Apr-20, 7:21 am)
சேர்த்தது : பசுபதி
பார்வை : 317

மேலே