சுதந்திர பயணம்

பேருந்து,பெண்மையின் சாபக்கேடு...
நெரிசலில் நிற்கதியாவாள்...
கூட்டத்தில்,குருகிய குழந்தையாவாள்...
ஆணின் கொடூரப்பார்வையில்,
நீர் குமிழில் நிர்வாணமாவாள்...
நீர் விரும்பா மீனாவாள்...
நித்தம் ஒரு முறை,நிம்மதி மூச்சிடுவாள்...
சலசம் மேல் அமர்ந்த கலசம் போல்,கதிகலங்குவாள்...
வீடு வந்தால்,விண்ணை தொட்ட மகிழ்ச்சி...
உண்மையிலே,பெண்மை உயிருள்ள சடலமாவாள்...

எழுதியவர் : கதா (11-Apr-20, 9:50 pm)
சேர்த்தது : கதா
பார்வை : 57

மேலே