போற்றும் சோலை
===================
சினமேயுனை யழிவாக்கிடு மொருதீயென வெண்ணு
-சிரித்தேபகை தனையோட்டிட சிறப்பாவது மண்ணு
இனவாதமும் மொழிவாதமு மெதற்காமெனச் சொல்லு
-இதுபோலொரு பெருநோயினிற் விழநேர்வது தள்ளு
சனம்வாழ்வது அரிதாகிற நிலையானது முள்ளு
-சமமாகவுன் னயலானொடு சகதோழமை கொள்ளு
மனசாட்சியின் படியேநடை பயின்றேதினம் துள்ளு
-மலர்ச்சோலையு முனைபோற்றிடும் மகிழ்ந்தேயதை யள்ளு.
**