மே தினம் செய்தி

மே தினம் செய்தி .

ஓய்வு அறியா கைகள்
கட்டப்பட்டு
வீட்டு சிறையில்.
சுதந்திரமாக பறந்து பறவைகள் இன்று கூண்டுக்குள்.
அது வந்து விடும்
இது வந்து விடும்
எதுவும் வரவில்லை
பசியை தவிர
பட்டினியை தவிர
கொரோனாவை விட கொடியவன்
வறுமை என்பவன்.

பசியால் வாடும் எங்கள் குழந்தைகள்
பாலுக்கு ஏங்கும் பச்சிளங்குழந்தைகள்
பட்டினியில் வாடும் கர்ப்பிணி பெண்கள்
கால் வயிறு கஞ்சிக்காக அல்லல் படும் முதியவர்கள்
அட ஆறிலும் சாவு
நூறிலும் சாவு
அரசாங்கமே ஆனையிடு
அவிழ்த்து விடு
எங்கள் உயிர் காத்திட
உழைக்க விடு
ஒரு கை பார்கிறோம்
அதுவா, நாங்காளா என்று.
- பாலு

எழுதியவர் : பாலு (30-Apr-20, 10:09 pm)
சேர்த்தது : balu
Tanglish : maay thinam seithi
பார்வை : 80

மேலே