செவிலியரின் நிலையிதுதான்

படபடப்பா யிருந்தவரைச் சோதித்துப் பார்த்தேன்
பரிவோடு பேசியவர் பயம்தெளிய வைத்தேன்!
கடமைக்குச் செய்யாமல் தந்தையைப்போல் எண்ணிக்
கனிவோடு கவனித்துப் பணிவிடையும் செய்தேன் !
தொடர்சிகிச்சை யளித்துவந்தும் பயனேது மில்லை
சுயநினைவு திரும்பாமல் திரும்பாவூர் சென்றார் !
திடமான என்மனமு முடைந்துவிட்ட தின்று
செவிலியரின் நிலையிதுதான் அறியீரோ சொல்வீர்!!

சியாமளா ராஜசேகர்

எழுதியவர் : சியாமளா ராஜசேகர் (8-May-20, 3:54 pm)
பார்வை : 34

மேலே