நீடு வாழ வைப்பாயா

பாசக் கயிற்றை வீசி வீசிப்
பாரில் உயிர்கள் பறிக்கின்றாய் !
ஓசை யின்றி உலகைச் சுருட்ட
ஓட்டி (OT) நாளும் பார்க்கின்றாய்!
நாசம் செய்ய நினைத்த பின்னும்
நமனே! உன்னை கேட்கின்றேன் !
நேசக் கரத்தை நீட்டி எம்மை
நீடு வாழ வைப்பாயா ??

கணக்குப் பார்க்கும் சித்ர குப்தன்
கைகள் வலித்துக் களைத்தானே !
பிணக்கு வந்து சேரும் முன்பு
பிரிவைச் சற்றே எண்ணிப்பார் !
இணக்கத் தோடு கொரோனா தொற்றை
இன்றே ஒழித்துக் கட்டிவிடு!
சுணக்க மின்றிச் செய்தா லுன்னைச்
சுற்றஞ் சூழ வணங்கிடுவோம்!

சியாமளா ராஜசேகர்

எழுதியவர் : சியாமளா ராஜசேகர் (8-May-20, 3:55 pm)
சேர்த்தது : Shyamala Rajasekar
பார்வை : 53

மேலே