ஏக்கம்

இமையாக நான் இருந்தேன்!
இரு விழியாக நீ இருந்தாய்!
இதமாய் காதல் பூக்கிறது இதயம்!
இளந்தென்றல் தீண்ட சோலையாகிறது
சில சமயம்!
இதழ் பறித்து தேன் உறிஞ்சினேன் ஆணாக! நீ இதழ் நுழைத்து தேன் எடுத்தாய் வண்டாக!
அந்த வான்பூ சிணுங்க பனித்துளி கரையுமோ! இல்லை பெண்பூ சிணுங்க இந்த காளை மனம் ஏங்குமோ!

வேல் முனியசாமி...

எழுதியவர் : வேல் முனியசாமி (20-May-20, 12:10 am)
சேர்த்தது : வேல் முனியசாமி
Tanglish : aekkam
பார்வை : 188

மேலே