காதலும் கடமையும்

இந்தக் காதலை என்னால்
எளிதில் புரிந்துக்கொள்ள முடியவில்லை
அருகாமையில்
இருக்கும்போது ஊடல்
தொலைவில் சென்றபோது தேடல்
தொலைத்துவிடத்தான் நினைக்கிறேன்
ஏனோ நானே தொலைந்துபோகிறேன்
இந்தக் காதலுக்கு சொற்களால் ஆடைக்கட்டி
மானம் காத்து வந்தேன்
சொற்கள் தீர்ந்துவிட்டதால்
எனக்கு நானே
பாடைக் கட்டிக்கொள்கிறேன்
காதல் எனக்கு ஆடையும் அடையாளமும் கொடுத்தது
சோரம்போன காதலாக இருந்தாலும்
அதற்கு சொற்களால் ஆடைக்கட்டுவது
எனது கடமை

எழுதியவர் : செல்வமுத்து மன்னார்ராஜ் (22-May-20, 4:21 am)
பார்வை : 261

மேலே