ஒருதலைக்காதல்

காதலின் தாக்கத்திலே
கன்னியவள் முகம் காணவே
என் கற்பனை காதலும்
காவியம் ஆனதே
அவளின் நினைவிலே
சிறையடைந்த இதயமும்
சித்திரமாய் சிரிக்க
மனதெங்கிலும் மயக்கமே
காதலைச் சொல்லியே
காத்திருந்த நானோ
கன்னியின் வார்த்தைக்காக
காலமெல்லாம் காத்திருந்தேன்
கல்லூரி வாசலிலே
கன்னியவள் வருகையிலே
வாழ்வே வசமானது
அருகையிலே வந்தவள்
கூறியதன் வார்த்தையிலே
இறப்பும் வரமானது
இறுதியில்
காவியமும் குப்பையானது

...என் உயிர் காதலி ஜோதிக்கு இவ்வரிகள் சமர்ப்பணம்...

எழுதியவர் : ஜோவி (22-May-20, 9:23 am)
சேர்த்தது : ஜோவி
பார்வை : 314

மேலே