சிரித்தால்தான் மல்லிகை மல்லிகை

மணம் வீசினால் அது மல்லிகை
மனதைத் தொட்டால் அது கவிதை
சிரித்தால்தான் மல்லிகை மல்லிகை
சிரித்தாலும் அழுதாலும் கவிதை !

செப்பினைச் செதுக்கச் செதுக்கச் சிலை
செந்தமிழைச் செப்பச் செப்பக் கவிதை
செப்பினை சிலையாக்கும் சிற்பியின் கை
செந்தமிழைக் கவிதையாக்கும் கவிஞனின் கை !

நீரோடும் வழி நதியின் பாதை
நெஞ்சோடும் மொழி தமிழின் கவிதை
நீரோடைகள் பாடும் பாடல் நீரலை
நினைவோடை உணர்வுகளின் பாடல் கவிதை !

எழுதியவர் : கவின் சாரலன் (22-May-20, 9:43 am)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 51

மேலே