மருத்துவர்
தமதுயிர் பெரிதெனத் தனிமையி லிருப்பதை
-தவமென நினைப்பதை விட்டு
எமனுயிர் பெறவென வருகிற நிலையுள
-எளியவ ருடலையுந் தொட்டு
நமதுயி ருறங்கிடும் நடுவிர வதனிலும்
-நனிச்சிறப் புடன்பிணி கட்கு
சமத்துடன் சிகிச்சையு மளித்திடும் மருத்துவர்
-சகத்திறைக் கடுத்தவ ரன்றோ!