ஆயுள் காதி

திருட்டுத் தனமாய்
இருட்டு இதயறையில்.
எலும்பிலும் முட்டாமல்
குருதியிலும் தட்டாமல்.
நுழைந்து விட்டாய் .

நுழைந்த நீ நெஞ்சணையில் .
உறங்கிட வேண்டியவை தானே .
இல்லையெனில் ஒரு ஓரமாய்.
கம்முனு இருந்து தொலைந்திடலாமே.

உறக்கத்தைக் கலைக்கிறாய் .
உணர்ச்சியைக் கிள்ளுகிறாய் .
உணர்வைக் கொல்லுகிறாய்.
உடலுக்குச் சூடு ஏற்றுகிறாய் .
ஆசைகளைக் கொடுக்கிறாய் .

பாசத்தைக் கேட்கிறாய்.
மோகத்தை உசுப்புகிறாய்.
உள்ளத்திலே துள்ளுகிறாய்.
உதட்டைக் கனவில் மெல்லுகிறாய் .
உள்ளுணர்ச்சியில்
என்னன்னமோ செய்கிறாய் .

உடையைக் கலைகிறாய் .
இடையைத் தேடுகிறாய்.
மச்சம் எண்ணிப் புன்னகை புரிகிறாய் .
இச்சுக் கொடுத்து முத்த யுத்தம் செய்கின்றாய்.
சேலையைக் கசக்குகிறாய் .
கூந்தலைக் கலைக்கிறாய் .

வேர்வைத் துளிகளை அழைக்கிறாய்.
மூச்சின் வேகம் பெருக்கிறாய் .
உத்தரவு இன்றி உள்ளே
நுழைந்தது முதல் குற்றம் .
இத்தனை மாற்றம் என்னில்
விதைத்தது இரண்டாம் குற்றம்.

ஒன்றும் அறியாதவர் போல்
காதல் தோட்டம் நட்டு காமப்
பூ பறிப்பது மூன்றாம் குற்றம் .
குற்றத்துக்கு மேல் குற்றம்
புரிந்த உன்னைக் ஓமகுண்டம்
அருகே அமர்த்துவேன் வாதாடி
போராடி ஆயுள் கைதியாக்குவேன்.

எழுதியவர் : கவிக்குயில் ஆர். எஸ் கலா (26-May-20, 7:59 pm)
சேர்த்தது : ஆர் எஸ் கலா
Tanglish : aayul kaathi
பார்வை : 119

மேலே