விவசாயி 4

கதிரவன் கதிரை
விளையச்செய்யாது
இவன் கதியை
குளையச்செய்கிறான்

இவன் நிலத்தில்
நதியும் வருவதில்லை
தட்டிக் கேட்க
எந்த நாதியும் வருவதில்லை

வித்தை விளைவித்து
கட்டினான்
விலை இன்றி
இறைவன்
இவனுக்கு
வித்தை காட்டுகிறான்

மாரி பருவம் மாறி
ஏமாற்றியது

இவன்
நாணல் வேர்
உண்டதோ
கானல் நீர்

பருத்தி
விதைத்தவன்
வயிற்றில் தீ விளைந்தது

விளைவு
இவன் வயிறு தொங்கியது
மின் விசிறியில்
முடிவு
கயிறு தொங்கியது

எழுதியவர் : குமார் (29-May-20, 10:14 pm)
சேர்த்தது : புதுவைக் குமார்
பார்வை : 106

மேலே