இன்று ஒன்றே நன்று
'இன்று' என்பதுதான் இயற்கை
நமக்களித்த பொன்னான நேரம்
அதை ஒரு நொடிக்கூட
வீணடிக்காது ஆக்கத்தொழில்
அத்தனையும் செய்வோம் அதில்
நாளையைக் கனவு காண்போம்
இனிதாய்க் கூடிவர
நாளையை யாரறிவார் அந்த
இயற்கையைத் தவிர