போதிக்கும் சருகு
நீரோடு சேர்கையில்
மக்கி உரமாகி
வனத்தைச் செழிப்பாக்கும்
தீயோடு சேர்கையில்
பற்றிப் பரவி
வனத்தை அழித்துவிடும்
சருகு, நீ
யாரோடு சேரவேண்டும்
என்பதைத்தான்
ஒற்றையடிப் பாதையில்
தனிமையில் நடக்கும் உனக்கு
‘சரக்..’ ‘சரக்..’ என்று போதிக்கிறது
**
சருகைப் புரியாத நீயோ
பின்னால் ஏதோ தொடர்ந்து
வருவதாய் எண்ணிக்கொண்டு
திரும்பிப் பாராமலேயே
ஓடி மறைகிறாய்
**
**