பெண்ணே

உனக்காவே....!


பெண்ணே....
என் தாய்நாட்டு மண்ணே......!

பறக்கிறதே! பறக்கிறதே!
என் மனம்
உன் வாசல் தேடி பறக்கிறதே...!

கரைகிறதே! கரைகிறதே!
என்னுடல்
உன் நினைவால் கரைகிறதே...!

நிறைகிறதே! நிறைகிறதே!
உன்னருகில் இருந்தால்
வயிறும் நிறைகிறதே...!

ஏங்குகிறதே! ஏங்குகிறதே!
என் கைகள்
உன்னை ஏந்திக்கொள்ள ஏங்குகிறதே!

வருகிறதே! வருகிறதே!
என் மனதிலும்
கவிதைகள் வருகிறதே...!

ரசிக்கிறதே! ரசிக்கிறதே!
கண்கள்
கண்டதையெல்லாம் ரசிக்கிறதே...!

உரைகிறதே! உரைகிறதே!
உந்தன் முந்தனை உரசியலே
உதிரமெல்லாம் உறைகிறதே..!

துடிக்கிறதே! துடிக்கிறதே!
என் இதயம்
உனக்காகவே துடிக்கிறதே...!

கவிதை ரசிகன்

எழுதியவர் : கவிதை ரசிகன் (2-Jun-20, 8:49 pm)
பார்வை : 72

மேலே