அவள் கூந்தல்
தடாகத்தின் பளிங்கு நீரில்
குளித்துவிட்டு கரைக்கு வந்தவள்
கார்மேகக் கூந்தலை சற்றே விரித்தாள்
விரித்த கூந்தல் காற்றில் ஆற
பின்னே அதைப் பார்த்த
கலாப மயில் ஒன்று அக்கூந்தலை
மழைத்தரும் கார்மேகத்துண்டு
மண்ணில் வந்து இறங்கியதோ
என்று எண்ணியதோ தெரியவில்லை
அவளருகே சென்றது மயில்
அவள் விரக்கூந்தலைப்பார்த்து தன்
அழகு தோகையை விரித்து
அழகாய் ஆடத்தொடங்கியது