உணரவில்லை நான்
பசியுடன் வந்தேன் மனிதா
பழத்தில் வெடி வைத்தாய்
பாசமுடன் தந்தாய் நினைத்தேன்
பகையுடன் தந்தாய் என்று உணரவில்லை
கடவுளுக்கு படைத்த அமுதென்று நினைத்தேன்
என்னை கல்லறைக்கு அனுப்பும் விஷம் என்று உணரவில்லை!
கருவில் இருந்த குழந்தைக்கு தெரியவில்லை
மண்ணில் வரும் முன் மண்ணிற்குள் செல்வான் என்று
- முத்து துரை சூர்யா