இதமான காதல் கவிதை
இனியவளே
என் இதயமானவளே.....
என்னவளே
என்னுயிர் ஆனவளே....
நீ உண்ணும் போது
நான் உணவூட்டனும்...
நீ உறக்கும் போது
நான் தாலாட்டனும்....
நீ தலைவாரி முடிக்கும் போது
நான் பூச்சூட்டனும்...
நீ தனிமையில் இருக்கும் போது
உன்னோடு உரையாடி மகிழனும்...
உனக்கு உடல்நிலை சரியில்லாத போது
நான் உடனிருந்து பார்த்துக்கனும்...
உன் மனதில் கவலை வரும் போது
உன்னை மார்போடு அணைத்துக்கனும்...
உன் விழியில் வடியும் கண்ணீர்
ஆனந்த கண்ணீராய் ஆக்கிடனும்...
காலையில் எழும்போதெல்லாம்
உன் முகத்தில் கண் விழித்திடனும்...
நான் கஷ்டப்பட்டாலும்-உன்னை
கஷ்டப்படாமல் வாழ வைத்திடனும்...
காலமெல்லாம் என் வீட்டினுல்
உன் கொழுசொலி கேட்டிடனும்...
கையும் ரேகையும் போல்
நாம் சேர்ந்திடனும்....
ராமர் சீதையும் போல்
நாம் வாழ்ந்திடனும்......
கவிதை ரசிகன்