பெண்ணும் மதியும்
பெண்ணே பாரங்கே வானில்
ஒளிரும் முழுநிலவாய் சந்திரன்
அத்தனை அழகும் இருந்தும்
அது என்ன அங்குமிங்கும் மாசு
திரிஷ்டி வைத்தது போலவே
உந்தன் மதியொத்த முகத்தில்
பருவக் கோளாறால் பருக்கள்
உந்தன் முகத்தின் இம்மாசு
மறைந்திடும் காலப் போக்கில்
பாவம் அந்த வான்மதி
வளர்ந்தும் தேய்ந்தும் வளர்ந்தும்
பார்த்தும் மாசு தீரவில்லை
என்ற ஏக்கத்தில் மாதத்தில்
ஓர் நாள் வாராதும் போகிறது
உனழகு இதனால் சொல்வேன்
மதியையும் ஒருபடி மிஞ்சியதே