பாவம் நிலா

நீல வானமாம் கடலிலே
நீந்தி வந்த வெண்ணிலா
மண்ணிலே அந்த தடாகத்தைக்
கண்டது அதன் பளிங்குநீரில்
தன்னையே கண்டது நிலா
அது யார் என்று நினைத்து
தடாகத்தின் மேலே நின்றுவிட்டது நிலா
தூங்கியது நிலா

உதயமானது ..... நிலா துயில் நீங்க
விழித்துக்கொண்டது....
தடாகத்தில்தான் நிலா இல்லாமல் போனது
நிஜம் புரிந்து நிலா பயணம் தொடங்க பார்க்க
வெய்யோன் நிலவை காணாது செய்தான்

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசு (7-Jun-20, 2:47 pm)
Tanglish : paavam nila
பார்வை : 84

மேலே